`கொடுக்க வேண்டியதை கொடுப்பதால், தலைமை நான் சொல்றததான் கேட்கும்' - தாராபுரம் நகர தி.மு.க செயலாளர் சவடால் பேச்சு!

திருப்பூர்: `என்னை உங்களால் ஒன்றும் பண்ண முடியாது.. தலைமை நான் சொல்றததான் கேட்கும், கொடுக்க வேண்டியதை கொடுத்திடுறேன்' என்று அ.தி.மு.கவுக்கு ஆதரவாகச் செயல்படும் தி.மு.க செயலாளர் சவடாலாக கூறியிருக்கிறார்.

திருப்பூர்: `என்னை உங்களால் ஒன்றும் பண்ண முடியாது.. தலைமை நான் சொல்றததான் கேட்கும், கொடுக்க வேண்டியதை கொடுத்திடுறேன்' என்று அ.தி.மு.கவுக்கு ஆதரவாகச் செயல்படும் தி.மு.க செயலாளர் சவடாலாக கூறியிருக்கிறார்.

தாராபுரம் தி.மு.க நகரச் செயலாளராக இருப்பவர் தனசேகர். இவர் ஆளும் அ.தி.மு.கவினருடன் இணக்கமாக இருப்பது மட்டுமல்லாமல், தி.மு.க கரைவேட்டி கட்டியபடி அ.தி.மு.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால், தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் இவரது செயல்பாடுகள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில், தாராபுரம் நகர கூட்டுறவு சங்கத்துக்கு அ.தி.மு.கவினர் வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றபோது, தி.மு.க கரைவேட்டியுடன் சென்று, அவர்கள் அருகே நின்று அ.தி.மு.கவினரின் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இப்படிச் செயல்படும் அவர் அ.தி.மு.கவுக்கு மாறிவிடலாமே என கமெண்ட் அடித்த பகுதி தி.மு.கவினர் கட்சித் தலைமைக்கும் கடிதம் எழுதியுள்ளனர். ஆனால், தனசேகர்மீது இதுவரை தி.மு.க தலைமை நடவடிக்கை எடுக்காதது தாராபுரம் பகுதி தி.மு.கவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

`என்னை உங்களால் ஒன்றும் பண்ண முடியாது.. தலைமை நான் சொல்றததான் கேட்பாங்க, கொடுக்க வேண்டியதை கொடுத்தர்றேன்ல' என ஓபனாகவே திமுக நிர்வாகிகளிடம் பேசும் தனசேகரை கண்டு கழக உடன்பிறப்புகள் தலையில் அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும், அ.தி.மு.க தொண்டர்களை மதிக்கும் அளவுக்குக்கூட, சக தி.மு.க நிர்வாகிகளை தனசேகர் மதிப்பதில்லை எனவும் அ.தி.மு.கவினர் முன்னிலையில் வைத்தே தங்களை அவமானப்படுத்துவதாக தி.மு.கவினர் குற்றம்சாட்டுகின்றனர். தனசேகரை இப்படியே தலைமை கண்டுகொள்ளாமல் விட்டால், இந்தத் தொகுதியில் தி.மு.க தலையில் தனசேகரே மண்ணை வாரி போட்டுவிடுவார் என தி.மு.கவினர் குமுறுகின்றனர்.

மேலும், விரைவில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள நகரச் செயலாளர் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கெடுப்பதற்குள் தனசேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாராபுரம் தி.மு.கவினர் எதிர்பார்த்திருக்கின்றனர். 

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...