திருப்பூர்: வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்: வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 18வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட வந்த அனைத்திந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 18வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட வந்த அனைத்திந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.