திருப்பூர்: மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூரில் ஏர் கலப்பை,மண் சட்டியுடன் ரயில் மறியல் போராமனிதநேய ட்டத்தில் ஈடுபட முயன்ற மனிதநேய மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்: மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூரில் ஏர் கலப்பை,மண் சட்டியுடன் ரயில் மறியல் போராமனிதநேய ட்டத்தில் ஈடுபட முயன்ற மனிதநேய மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 18-வது நாளாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக ஏற்று வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி திருப்பூரில் மனிதநேய மக்கள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது, காவல்துறையினர் வைத்திருந்த தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்தனர்.

இதையடுத்து திருப்பூர் டவுன்ஹால் மைதானம் அருகே உள்ள பாலத்தின் இரு சாலைகளையும் அடைத்த மனிதநேய மக்கள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் உடனடியாக அவர்களை கைது செய்தனர். முன்னதாக ஊர்வலமாக வந்த மனிதநேய மக்கள் கட்சியினர் ஏர்கலப்பை, மண்சட்டி உள்ளிட்ட விவசாயிகள் பயன்படுத்தும் உபகரணங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.