ஏர் கலப்பை, மண் சட்டியுடன் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற மக்கள் கட்சியினர் கைது!

திருப்பூர்: மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூரில் ஏர் கலப்பை,மண் சட்டியுடன் ரயில் மறியல் போராமனிதநேய ட்டத்தில் ஈடுபட முயன்ற மனிதநேய மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர்: மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூரில் ஏர் கலப்பை,மண் சட்டியுடன் ரயில் மறியல் போராமனிதநேய ட்டத்தில் ஈடுபட முயன்ற மனிதநேய மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். 



மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 18-வது நாளாக தொடர்ந்து போராடி வருகின்றனர். 

இந்நிலையில், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக ஏற்று வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி திருப்பூரில் மனிதநேய மக்கள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது, காவல்துறையினர் வைத்திருந்த தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்தனர். 



இதையடுத்து திருப்பூர் டவுன்ஹால் மைதானம் அருகே உள்ள பாலத்தின் இரு சாலைகளையும் அடைத்த மனிதநேய மக்கள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் உடனடியாக அவர்களை கைது செய்தனர். முன்னதாக ஊர்வலமாக வந்த மனிதநேய மக்கள் கட்சியினர் ஏர்கலப்பை, மண்சட்டி உள்ளிட்ட விவசாயிகள் பயன்படுத்தும் உபகரணங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...