விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் காத்திருப்பு போராட்டம்..!

கோவை: விவசாய சட்டத்திற்கு எதிராக போராடி உயிரிழந்த 11 விவசாயிகளுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும், என, கோவையில் அகில இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.



கோவை: விவசாய சட்டத்திற்கு எதிராக போராடி உயிரிழந்த 11 விவசாயிகளுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும், என, கோவையில் அகில இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.



புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 19 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, பல்வேறு அமைப்பினர், கட்சியினர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதுவரை, தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் 11 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 



அவ்வாறு, உயிரிழந்த 11 பேருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும், அவர்களது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும், என.அகில இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். 



இந்நிலையில், விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சிபிஐ, சிபிஐ(எம்), மதிமுக, கொங்கு மக்கள் தேசிய கட்சி, மக்கள் அதிகாரம், உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அதில், பங்கேற்ற பெண்கள் உட்பட 87 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேளான் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அதானிக்கும் அம்பானிக்கும் விவசாயத்தை விற்காதே, இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கூடாது என மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



இதனைத் தொடர்ந்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 87 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். விவசாய சங்கத்தினர் போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...