கோவையில் ஆட்டோ டிரைவர் போலீஸ் ஸ்டேஷனில் தீக்குளித்தால் பரபரப்பு..!

கோவை: கோவை போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில்், ஆட்டோ டிரைவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில், ஆட்டோ டிரைவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சுந்தராபுரம் அடுத்த பிள்ளையார்புரம் காந்தி நகரை சேர்ந்தவர் சவுக்கத்அலி (32). இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர். நேற்று மாலை சவுக்கத் அலி வெள்ளலூரில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் மற்றொரு ஆட்டோ டிரைவர் சதீஷ் என்பவருடன் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்த போத்தனூர் போலீசார், சவுக்கத் அலி மற்றும் அவரின் ஆட்டோவை பறிமுதல் செய்து ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். பின்னர், அவர் மீது பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். மேலும், சவுக்கத்அலி குடிபோதையில் இருந்ததால் போலீசார் ஆட்டோவை இன்று வந்து அபராதத் தொகையைக் கட்டி எடுத்துக் கொள்ளுமாறு கூறி உள்ளனர்.

இதையடுத்து, இரவு 8 மணி அளவில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே சென்ற சவுக்கத் அலி, கையில் இருந்த பெட்ரோல்ல் கேனுடன் மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துள்ளார். பின்னர், பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீயை பற்ற வைத்து போலீஸ் ஸ்டேஷனுக்குள் அலறிக்கொண்டு வலியில் அங்குமிங்கும் ஓடியுள்ளார்.

அப்போது, பணியில் இருந்த போலீஸ்காரர் அவரை மீட்டு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அவருக்கு 60 சதவீத தீக்காயங்கள் இருந்ததால் சவுக்கத்அலி, வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சம்பவம் குறித்து பணியில் இருந்த போலீசாரிடம் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில் வளாகத்தில் ஆட்டோ டிரைவர் தீக்குளித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...