கோவை: கோவையில் நேற்று வெவ்வேறு சம்பவங்களில் மாணவர் உட்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து சம்பந்தபட்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை: கோவையில் நேற்று வெவ்வேறு சம்பவங்களில் மாணவர் உட்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து சம்பந்தபட்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை பீளமேடு, சேரன் மாநகர் சேர்ந்த மாணிக்கம் என்பவர் மகன் அரவிந்த் சுப்பையா (19), கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம், இவரது தாய் மற்றும் சகோதரி ஆகியோர் ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளனர், அப்போது, வீட்டில் தனியே இருந்த அரவிந்த் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சமீபமாக, படிப்பில் கவனம் செலுத்தாமல் கடந்த ஒரு மாதமாக கடும் மன உளைச்சலில் அவர் இருந்து வந்ததாக தெரிகிறது.
இதுதொடர்பாக போலீசார் 174 சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
இதேபோல், செல்வபுரம் எல். ஐ. சி காலனி சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் உதயகுமார் (37), நகை பட்டறை உரிமையாளர். இவர், சில மாதங்களாக போதிய வருமானம் இல்லாததால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கஷ்டபட்டு வந்துள்ளார். இதனால், கடன் கட்ட முடியாமல் தவித்த இவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து, செல்வபுரம் போலீசார் 174 சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
கோவை பீளமேடு, சேரன் மாநகர் சேர்ந்த மாணிக்கம் என்பவர் மகன் அரவிந்த் சுப்பையா (19), கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம், இவரது தாய் மற்றும் சகோதரி ஆகியோர் ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளனர், அப்போது, வீட்டில் தனியே இருந்த அரவிந்த் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சமீபமாக, படிப்பில் கவனம் செலுத்தாமல் கடந்த ஒரு மாதமாக கடும் மன உளைச்சலில் அவர் இருந்து வந்ததாக தெரிகிறது.
இதுதொடர்பாக போலீசார் 174 சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
இதேபோல், செல்வபுரம் எல். ஐ. சி காலனி சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் உதயகுமார் (37), நகை பட்டறை உரிமையாளர். இவர், சில மாதங்களாக போதிய வருமானம் இல்லாததால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கஷ்டபட்டு வந்துள்ளார். இதனால், கடன் கட்ட முடியாமல் தவித்த இவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து, செல்வபுரம் போலீசார் 174 சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.