கோவையில் மாணவர் உட்பட 2 பேர் தற்கொலை

கோவை: கோவையில் நேற்று வெவ்வேறு சம்பவங்களில் மாணவர் உட்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து சம்பந்தபட்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவையில் நேற்று வெவ்வேறு சம்பவங்களில் மாணவர் உட்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து சம்பந்தபட்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை பீளமேடு, சேரன் மாநகர் சேர்ந்த மாணிக்கம் என்பவர் மகன் அரவிந்த் சுப்பையா (19), கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம், இவரது தாய் மற்றும் சகோதரி ஆகியோர் ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளனர், அப்போது, வீட்டில் தனியே இருந்த அரவிந்த் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சமீபமாக, படிப்பில் கவனம் செலுத்தாமல் கடந்த ஒரு மாதமாக கடும் மன உளைச்சலில் அவர் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதுதொடர்பாக போலீசார் 174 சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

இதேபோல், செல்வபுரம் எல். ஐ. சி காலனி சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் உதயகுமார் (37), நகை பட்டறை உரிமையாளர். இவர், சில மாதங்களாக போதிய வருமானம் இல்லாததால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கஷ்டபட்டு வந்துள்ளார். இதனால், கடன் கட்ட முடியாமல் தவித்த இவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து, செல்வபுரம் போலீசார் 174 சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...