வால்பாறையில் கரடி தாக்கியதால் முதியவருக்கு தலையில் பலத்த காயம்..!

கோவை: வால்பாறையில் காலைக்கடன் கழிக்க சென்றவரை கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: வால்பாறையில் காலைக்கடன் கழிக்க சென்றவரை கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சேடல் அணை செண்ணியப்பா எஸ்டேட் பகுதியில் கனகராஜ் என்பரது வீட்டிற்கு அவருடைய தாத்தா, ராசு (75). திருச்சிபமணப்பாறையில் விருந்தினராக வந்துள்ளார்.

இன்று காலை 6 மணி அளவில், அந்த முதியவர் காலைக்கடனை கழிக்கச் செல்லும்போது, புதரில் பதுங்கியிருந்த கரடி அவரை தலைப்பகுதியில் கடித்துள்ளது. யாரும் உதவிக்கு இல்லாததால், தனி நபராக அந்த கரடியிடம் போராடிய அவர், பலத்த காயங்களுடன் வீடு திரும்பி உள்ளார். 

இதனை, அறிந்த பேரன் கனகராஜ் வனத்துறைக்கு தெரிவிக்கவே, உடனே அப்பகுதிக்கு மானாம்பள்ளி வனச்சரக மணிகண்டன் மற்றும் ஃபாரஸ்ட் ஷேக் உமர் வன தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.

பின், காயமடைந்த அந்த முதியவருக்கு, சோலையார் அணை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு 35 தையல்கள் போடப்பட்டது.

தலையில் பலத்த காயம் ஏற்பட்ட காரணத்தினால் மேல் சிகிச்சைக்காக அவர், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால், அப்பகுதியில் கூடிய பொது மக்கள், கூண்டு வைத்து அக்கரடியை பிடிக்க வேண்டும், என்று வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...