கோவை: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம் மாரண்ட ஹள்ளியில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து தோள்செட்டி ஏரிக்குத் தண்ணீர் கொண்டு வரும் இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக் கோரி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இதனை கண்டித்து சிங்காநல்லூரில் இருந்து ஹோப் காலேஜ் செல்லும் காமராஜர் சாலையில் அக்கட்சியினர் சுமார் 30க்கும் மேற்பட்டோர் திரண்டு பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரனை விடுதலை செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், காவல்துறை மற்றும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் காமராஜர் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர், இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.
தருமபுரி மாவட்டம் மாரண்ட ஹள்ளியில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து தோள்செட்டி ஏரிக்குத் தண்ணீர் கொண்டு வரும் இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக் கோரி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இதனை கண்டித்து சிங்காநல்லூரில் இருந்து ஹோப் காலேஜ் செல்லும் காமராஜர் சாலையில் அக்கட்சியினர் சுமார் 30க்கும் மேற்பட்டோர் திரண்டு பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரனை விடுதலை செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், காவல்துறை மற்றும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதனால் காமராஜர் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர், இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.