கோவை சிங்காநல்லூர் அருகே விபச்சாரத்திற்கு அழைத்த 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!

கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே விபச்சாரத்திற்கு அழைத்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே விபச்சாரத்திற்கு அழைத்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மதுக்கரையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் தனபால் (22). இவர் நேற்று காலை சூலூர் பள்ளபாளையம் அருகே நடந்து சென்றார்.

அப்போது, அங்கிருந்த 2 பேர் அவரை வழிமறித்து தங்களிடம் பெண்கள் இருப்பதாகவும் நீங்கள் ஆசைப்பட்டால் உல்லாசமாக இருக்கலாம் என்றனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தனபால் அவரிடம் பணம் எடுத்து வருவதாக கூறி அங்கிருந்து சென்றார்.

பின்னர் இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு விபச்சாரத்துக்கு அழைத்து இரண்டு பேரையும் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் அங்குள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சிங்காநல்லூரைச் சேர்ந்த 40 வயது பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபசாரத்துக்கு பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் திண்டுக்கல்லைச் சேர்ந்த வேல்முருகன் (35), சிங்காநல்லூரை சேர்ந்த செல்வராஜ் (63) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...