கோவை: கோவை செல்வபுரம் அருகே புரோட்டா சாப்பிட்ட வடமாநில வாலிபர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை செல்வபுரம் அருகே புரோட்டா சாப்பிட்ட வடமாநில வாலிபர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜாஹீர் இஸ்லாம் (25). செல்வபுரத்தில் தங்கியிருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு ஜாஹீர் இஸ்லாம் வேலை முடிந்ததும் புரோட்டா சாப்பிட்டுவிட்டு அவர் அறைக்கு தூங்கச் சென்றார். அதிகாலை 4 மணியளவில் அவர் வாயிலிருந்து நுரை தள்ளி மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதனை பார்த்த பக்கத்து அறையில் இருந்தவர்கள் இஸ்லாமை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜாஹீர் இஸ்லாம் (25). செல்வபுரத்தில் தங்கியிருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு ஜாஹீர் இஸ்லாம் வேலை முடிந்ததும் புரோட்டா சாப்பிட்டுவிட்டு அவர் அறைக்கு தூங்கச் சென்றார். அதிகாலை 4 மணியளவில் அவர் வாயிலிருந்து நுரை தள்ளி மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதனை பார்த்த பக்கத்து அறையில் இருந்தவர்கள் இஸ்லாமை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.