தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்க சட்டம் 2019 மூலம் பாரம்பரிய கால்நடைகளை அழிக்க தமிழக அரசு முயற்சி - கார்த்திகேய சிவசேனாபதி குற்றச்சாட்டு

கோவை: தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்க சட்டம் 2019 மூலம் தமிழகத்தின் பாரம்பரிய கால்நடைகளை அழிக்க தமிழக அரசு முயற்சி எடுத்துள்ளதாக திமுகவின் மாநில சுற்றுச்சூழல் பிரிவு செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை: தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்க சட்டம் 2019 மூலம் தமிழகத்தின் பாரம்பரிய கால்நடைகளை அழிக்க தமிழக அரசு முயற்சி எடுத்துள்ளதாக திமுகவின் மாநில சுற்றுச்சூழல் பிரிவு செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி குற்றம்சாட்டியுள்ளார்.

உடுமலை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி பகுதியில் உள்ள கெடிமேடு, சுந்தரகவுண்டனூர், சூளேஸ்வரன்பட்டி பகுதிகளில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில், கார்த்திகேய சிவசேனாபதி கலந்து கொண்டார்.



அவருடன் பேசிய விவசாயிகள் பொள்ளாச்சியில் தென்னை விவசாயத்தில் தற்போது அடுக்கடுக்கான பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. நோய் தாக்குதல், விலை வீழ்ச்சி உள்ளிட்ட சிக்கல்கள் உள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த பிறகு கார்த்திகேய சிவசேனாபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:



தமிழகத்தில் பாரம்பரிய காளைகள் வைத்திருப்போர் பதிவு செய்ய வேண்டும். அவற்றை பராமரிக்காமல் இருந்தால் ரூபாய் 2 லட்சம் அபராதம் விதிப்பதுடன், கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும், அபராதத்தை கட்ட தவறினால் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் இந்த சட்டத்தில் தமிழக அரசு வழி செய்துள்ளது எனவும் இது நமது பாரம்பரிய இன மாடுகளை அழிக்கும் நடவடிக்கையாகும். தமிழகத்தின் பாரம்பரிய கால்நடைகளை பாதுகாக்கும் வகை நடவடிக்கைகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். மேலும், பாரம்பரிய மாடுகளுக்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஜெர்ரி ரக மாடுகள் மூலம் இனவிருத்தி செய்வதும் தடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...