கோவை: கோவை முத்தண்ணன் குளக்கரை அருகே உள்ள பனைமரத்தூரில் 30க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் மாநகராட்சி அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டன.
கோவை: கோவை முத்தண்ணன் குளக்கரை அருகே உள்ள பனைமரத்தூரில் 30க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் மாநகராட்சி அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டன.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குளக்கரைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகளால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், முத்தண்ணன் குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை அகற்றும் பணி நிறைவடைந்தது. அதில், சுமார் 2000 த்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன. அப்பகுதியில், உள்ளவர்களுக்கு மலுமிச்சம்பட்டி, கீரணத்தம், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் மாற்று இடங்களில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.
இதனிடையே, முத்தண்ணன் குளக்கரை அருகே உள்ள பனைமரத்தூரில் 50 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன. இந்த ஆக்கிரமிப்பு வீடுகளில் வசித்து வந்தவர்களுக்கு மாற்று இடங்களில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதில், 15 வீடுகளைச் சேர்ந்த மக்கள் காலி செய்துவிட்டுச் சென்றனர். மற்றவர்கள் தங்களது வீடுகளை காலி செய்யாமல் அங்கேயே இருந்தனர்.
இதைதொடர்ந்து, அவர்களுக்கு கடந்த வாரம் மாநகராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி, தொடர்ந்து மின் இணைப்பை துண்டித்தனர். பின், அவர்கள் வீடுகளை காலி செய்து விட்டனர். இதனையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பாக அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குளக்கரைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகளால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், முத்தண்ணன் குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை அகற்றும் பணி நிறைவடைந்தது. அதில், சுமார் 2000 த்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன. அப்பகுதியில், உள்ளவர்களுக்கு மலுமிச்சம்பட்டி, கீரணத்தம், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் மாற்று இடங்களில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.
இதனிடையே, முத்தண்ணன் குளக்கரை அருகே உள்ள பனைமரத்தூரில் 50 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன. இந்த ஆக்கிரமிப்பு வீடுகளில் வசித்து வந்தவர்களுக்கு மாற்று இடங்களில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதில், 15 வீடுகளைச் சேர்ந்த மக்கள் காலி செய்துவிட்டுச் சென்றனர். மற்றவர்கள் தங்களது வீடுகளை காலி செய்யாமல் அங்கேயே இருந்தனர்.
இதைதொடர்ந்து, அவர்களுக்கு கடந்த வாரம் மாநகராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி, தொடர்ந்து மின் இணைப்பை துண்டித்தனர். பின், அவர்கள் வீடுகளை காலி செய்து விட்டனர். இதனையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பாக அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.