கோவையில் இரு வேரு விபத்துக்களில், தனியார் பஸ் மோதி பெண் மற்றும் மரத்தில் வாகனம் மோதி வாலிபர் பலி..!

கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சாலையூர் பகுதியைச் சேர்ந்த நவ்ஷாத் அலி (வயது 30), இவர் தனது இருசக்கர வாகனத்தில் கோவையிலிருந்து குரும்பபாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென்று நிலை தடுமாறிய அவர் சாலை ஓரத்தில் உள்ள புளிய மரத்தில் மோதினார்.

கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சாலையூர் பகுதியைச் சேர்ந்த நவ்ஷாத் அலி (வயது 30), இவர் தனது இருசக்கர வாகனத்தில் கோவையிலிருந்து குரும்பபாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென்று நிலை தடுமாறிய அவர் சாலை ஓரத்தில் உள்ள புளிய மரத்தில் மோதினார். 

அதில், பலத்த காயத்துடன் மயங்கி கிடந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதேபோல, கோவை சரவணம்பட்டி விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் இவரது மனைவி சிந்தாமணி (வயது 50). இவர் விளாங்குறிச்சி சாலையில், நேற்று நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த தனியார் பஸ் சிந்தாமணி மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த பாலமுருகன் (28), என்பவரை கைது செய்தனர். 

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...