கோவை: கோவை வெரைட்டிஹால் ரோடு அருகே 10ம் வகுப்பு மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை வெரைட்டிஹால் ரோடு அருகே 10ம் வகுப்பு மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை வெரைட்டிஹால் ரோடு அருகே உள்ள எம்.என்.ஜி வீதியைச் சேர்ந்தவர் கணபதி. இவரது மகள் கவிதா (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த கவிதா தனது பெற்றோரிடம் அருகே உள்ள கடைக்கு செல்வதாக கூறி விட்டுச் சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, மாணவியின் பெற்றோர்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மாணவியின் தோழி ஆகிய வீடுகளில் தேடிப் பார்த்தனர். ஆனால், எங்கும் அவர் செல்லவில்லை என்பது தெரியவந்தது.
பின்னர், இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி போலீசில் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து, புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
கோவை வெரைட்டிஹால் ரோடு அருகே உள்ள எம்.என்.ஜி வீதியைச் சேர்ந்தவர் கணபதி. இவரது மகள் கவிதா (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த கவிதா தனது பெற்றோரிடம் அருகே உள்ள கடைக்கு செல்வதாக கூறி விட்டுச் சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, மாணவியின் பெற்றோர்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மாணவியின் தோழி ஆகிய வீடுகளில் தேடிப் பார்த்தனர். ஆனால், எங்கும் அவர் செல்லவில்லை என்பது தெரியவந்தது.
பின்னர், இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி போலீசில் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து, புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.