கோவை: கோவை குனியமுத்தூர் கோசல் நகர் குடியிருப்பு பகுதியில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக தேங்கி நிற்கும் மழை நீரால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவை: கோவை குனியமுத்தூர் கோசல் நகர் குடியிருப்பு பகுதியில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக தேங்கி நிற்கும் மழை நீரால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவையில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக கோவையின் அனைத்து குளங்களும் நிரம்பி வரும் நிலையில், குனியமுத்தூர் கோசல் நகர் பகுதி குடியிருப்புகளில் மழைநீர் மற்றும் அப்பகுதியில் உள்ள குளத்தில் இருந்து வரும் நீரால் குடியிருப்புகள் முழுவதும் நீர் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு மேலாக நீர் வெளியேற்றப்படாததால் நீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி மக்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்தனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்ததாகவும் பிரதான சாலையில் உள்ள நீரை மட்டும் வெளியேற்றிவிட்டு குடியிருப்பு பகுதியில் உள்ள நீரை வெளியேற்ற இன்று வரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

மேலும், மழைநீர் வெளியேற்றப்படுவதால் அப்பகுதி மக்கள் சாலையில் நடப்பதற்கும் வேலைக்குச் செல்வதற்கும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். கொசு மற்றும் விஷப்பூச்சிகளால் இரவு நேரங்களில் குழந்தைகளை வைத்துக்கொண்டு தூங்காமல் அச்சத்தில் இருப்பதாக தெரிவித்த அப்பகுதி மக்கள், உடனடியாக அரசு இப்பகுதியில் வடிகால் அமைத்து நீரை வெளியேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக கோவையின் அனைத்து குளங்களும் நிரம்பி வரும் நிலையில், குனியமுத்தூர் கோசல் நகர் பகுதி குடியிருப்புகளில் மழைநீர் மற்றும் அப்பகுதியில் உள்ள குளத்தில் இருந்து வரும் நீரால் குடியிருப்புகள் முழுவதும் நீர் சூழ்ந்துள்ளது.
இந்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு மேலாக நீர் வெளியேற்றப்படாததால் நீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி மக்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்தனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்ததாகவும் பிரதான சாலையில் உள்ள நீரை மட்டும் வெளியேற்றிவிட்டு குடியிருப்பு பகுதியில் உள்ள நீரை வெளியேற்ற இன்று வரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்
மேலும், மழைநீர் வெளியேற்றப்படுவதால் அப்பகுதி மக்கள் சாலையில் நடப்பதற்கும் வேலைக்குச் செல்வதற்கும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். கொசு மற்றும் விஷப்பூச்சிகளால் இரவு நேரங்களில் குழந்தைகளை வைத்துக்கொண்டு தூங்காமல் அச்சத்தில் இருப்பதாக தெரிவித்த அப்பகுதி மக்கள், உடனடியாக அரசு இப்பகுதியில் வடிகால் அமைத்து நீரை வெளியேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.