கோவை: கோவையில் கார் கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த, இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவை: கோவையில் கார் கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த, இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் பிஸ்வாஸ் (40), எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளார். இரு தினங்களுக்கு முன், அவர் கோவைக்கு குடும்பத்துடன் பொருட்கள் வாங்க காரில் வந்தார். பின்னர், பொருள்களை வாங்கிவிட்டு, கோவையில் இருந்து, பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் ஊருக்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, மதுக்கரை குவாரி ஆபீஸ் அருகே செல்லும்போது, குரும்பபாளையம் ரோட்டில் இருந்து ஒரு பைக், கார் மீது மோதுவது போல் வந்துள்ளது. இதனால், பிஸ்வாஸ் காரை நிறுத்தினார். அப்போது, பைக்கில் வந்தவர்கள் காரின் முன் பைக்கை நிறுத்தி, பிஸ்வாசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், காரின் முன் கண்ணாடியை உடைத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, பிஸ்வாஸ் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். விசாரணையில், போலீசார் சாமி கோவில் வீதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சசிகுமார் (21), தனியார் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பிரபு (26) ஆகியோரை கைது செய்து, மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வழக்கில் சம்மந்தப்பட்ட, பிரவீன் (21) போலீஸார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் பிஸ்வாஸ் (40), எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளார். இரு தினங்களுக்கு முன், அவர் கோவைக்கு குடும்பத்துடன் பொருட்கள் வாங்க காரில் வந்தார். பின்னர், பொருள்களை வாங்கிவிட்டு, கோவையில் இருந்து, பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் ஊருக்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, மதுக்கரை குவாரி ஆபீஸ் அருகே செல்லும்போது, குரும்பபாளையம் ரோட்டில் இருந்து ஒரு பைக், கார் மீது மோதுவது போல் வந்துள்ளது. இதனால், பிஸ்வாஸ் காரை நிறுத்தினார். அப்போது, பைக்கில் வந்தவர்கள் காரின் முன் பைக்கை நிறுத்தி, பிஸ்வாசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், காரின் முன் கண்ணாடியை உடைத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, பிஸ்வாஸ் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். விசாரணையில், போலீசார் சாமி கோவில் வீதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சசிகுமார் (21), தனியார் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பிரபு (26) ஆகியோரை கைது செய்து, மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வழக்கில் சம்மந்தப்பட்ட, பிரவீன் (21) போலீஸார் தேடி வருகின்றனர்.