கோவை மருதமலை கோவில் படிக்கட்டுகளில் விதியை மீறி கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்ற மலைவாழ் மக்கள் கோரிக்கை

கோவை: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகளில் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் பிறர், விதிகளை மீறி கடை வைத்திருப்பதாக, மலைவாழ் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகளில் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் பிறர், விதிகளை மீறி கடை வைத்திருப்பதாக, மலைவாழ் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு அடிவாரத்திலிருந்து மலை மேல் செல்வதற்கு, படிக்கட்டுகள் வழியாகவும், பேருந்து வழியாகவும், பக்தர்கள் சென்று வருகின்றனர். கோவில் அருகே சுமார் 63 மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் படிக்கட்டுகளில் கடைகள் அமைக்க அரசு அனுமதி அளித்தது. 

ஆனால், மலைவாழ் மக்களை தவிர மற்றவர்கள் கடை வைக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது படிக்கட்டுகளில் மலைவாழ் மக்களை தவிர மற்றவர்களும் கடை வைத்துள்ளனர், என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இது குறித்து புகார் தெரிவிக்கும் மலைவாழ் மக்கள், வழி நெடுக கடைகள் வைத்துள்ளதால், போக்குவரத்து இடையூறு மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து உள்ளது. இதனால், வன விலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால், உடனடியாக கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...