கோவை வடவள்ளி அருகே சாலை விபத்து; நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை உட்பட இருவர் பலி

கோவை: கோவை வடவள்ளி கருப்பசாமி முதலியார் வீதியைச் சேர்ந்தவர் விஜய் (32), இவர் பொம்மனாம்பாளையம் உள்ள தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார்.


கோவை: கோவை வடவள்ளி கருப்பசாமி முதலியார் வீதியைச் சேர்ந்தவர் விஜய் (32), இவர் பொம்மனாம்பாளையம் உள்ள தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார்.

இவர் நேற்று, பிற்பகல் தனது மோட்டார் சைக்கிளில் இன்சூரன்ஸ் செய்வதற்காக காந்திபுரம் சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்து மீண்டும் அவர் வேலை செய்யும் இடத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது, வடவள்ளி - தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே சென்றபோது, அவரது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, அந்த வழியாக நடந்து சென்ற நவாவூர் பிரிவைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ஆறுமுகசாமி (57,) என்பவர் மீது மோதியது.

இதில், ஆறுமுகசாமியும், மோட்டார் சைக்கிளில் வந்த விஜய்யும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

ஆனால், செல்லும் வழியிலேயே ஆறுமுகசாமி பரிதாபமாக உயிர் இழந்தார். படுகாயத்துடன் போராடிய விஜய், கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் இறந்த விஜய்க்கு கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...