கோவையில் தொடரும் திருட்டு சம்பவங்கள்: சின்னவேடம்பட்டி அருகே 9 பவுன் நகை ரூ.50 ஆயிரம் திருட்டு

கோவை: சமீபத்தில், கோவையில் தொடரும் திருட்டு சம்பவத்தால் பொது மக்கள் பீதியடைந்து வருகின்றனர். பூட்டிய வீடுகளில் திருட்டு சம்பவம், வழிப்பறி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது.


கோவை: சமீபத்தில், கோவையில் தொடரும் திருட்டு சம்பவத்தால் பொது மக்கள் பீதியடைந்து வருகின்றனர். பூட்டிய வீடுகளில் திருட்டு சம்பவம், வழிப்பறி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது.

நேற்று, கோவை சின்னவேடம்பட்டி, லட்சுமி நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (50), என்பவர் இரு நாட்களுக்கு முன்தினம் தனது உறவினர் ஒருவர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வெளியூருக்கு சென்று விட்டார். நேற்று காலை அவர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியான அவர், உடனே உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 9 பவுன் நகை, வெள்ளி குத்து விளக்கு, 50 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது தெரியவந்துள்ளத. இது குறித்து, விஜயகுமார் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்திய போலீஸார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும், வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து வழக்கு, திருட்டு வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...