கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது, என கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது, என கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஊராட்சி ஒன்றிய பகுதிகள் மற்றும் பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர்:- கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில், துரிதமாக மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப் பணிகள் காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது.
கோவையில் தினசரி 4000 பேருக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனையில் அதிக பட்சமாக 140 க்கும் நபர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது. இன்னும், வரும் நாட்களில் தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்புள்ளது, என்றார்.
கோவையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும் போது, ஆட்டோ, லாரி, பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களை ஓட்டுபவர்கள் பெரும்பாலும் முகக்கவசம் அணிவதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதாக பொது மக்கள் அலட்சியமாக இருப்பதும், முககவசமும் அணியாமல் வெளியில் செல்வது மிகவும் ஆபத்தானது. இதனால், மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பொதுமக்கள் முககவசம் அணிவது குறித்து உள்ளூர் நிர்வாகங்கள் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்கவும், விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஊராட்சி ஒன்றிய பகுதிகள் மற்றும் பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர்:- கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில், துரிதமாக மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப் பணிகள் காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது.
கோவையில் தினசரி 4000 பேருக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனையில் அதிக பட்சமாக 140 க்கும் நபர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது. இன்னும், வரும் நாட்களில் தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்புள்ளது, என்றார்.
கோவையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும் போது, ஆட்டோ, லாரி, பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களை ஓட்டுபவர்கள் பெரும்பாலும் முகக்கவசம் அணிவதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதாக பொது மக்கள் அலட்சியமாக இருப்பதும், முககவசமும் அணியாமல் வெளியில் செல்வது மிகவும் ஆபத்தானது. இதனால், மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பொதுமக்கள் முககவசம் அணிவது குறித்து உள்ளூர் நிர்வாகங்கள் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்கவும், விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, இவ்வாறு ஆட்சியர் கூறினார்.