போதையில் திருப்பூர் இரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி கைது ..! இரவு முழுவதும் போலீசார் சோதனை

திருப்பூர்: திருப்பூர் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக 108 அவசர அழைப்புக்கு மர்ம ஆசாமி ஒருவர் இரவு போனில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.


திருப்பூர்: திருப்பூர் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக 108 அவசர அழைப்புக்கு மர்ம ஆசாமி ஒருவர் இரவு போனில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

இதைதொடர்ந்து, அங்கு வந்த மாநகர் காவல் இணை ஆணையர், சுரேஷ்குமார் தலைமையில் இரயில்வே போலிசார், மோப்பநாய் பிரிவு, வெடிகுண்டு போலீசார் என சுமார் 50 மேற்பட்ட போலிசார் திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு இரவு 11 மணி அளவில் விரைந்து வந்து தீவிர சோதனை மேற்கொண்டனர்.



இந்த சோதனை நள்ளிரவு 12 மணியையும் தாண்டி நடந்தது.



ரெயில் நிலையத்தில் உள்ள சரக்கு மூட்டைகள் உள்ளிட்ட அனைத்தையும் போலீசார் சோதனை செய்ததில், எந்த வெடி பொருளும் கிடைக்கபெறவில்லை. சோதனையின் முடிவில், அந்த மர்ம நபரின் அழைப்பு புரளி என தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரிக்கையில், திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பகுதியிலிருந்து தேனியை சேர்ந்த ஆனந்த் என்பவர் மது போதையில் போனில், வெடிகுண்டு குறித்து எச்சரித்தது. தெரிய வந்தது. பின்னர், ஆனந்தை கைது செய்த திருப்பூர் தெற்கு போலீசார், அவரை விசாரித்து வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...