கோவை: கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகர் சேர்ந்த 23, வயது இளம்பெண், பி.காம், படித்து முடித்துவிட்டு வங்கி தேர்வு எழுதுவதற்காக பயிற்சி பெற்று வந்தார்.
கோவை: கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகர் சேர்ந்த 23, வயது இளம்பெண், பி.காம், படித்து முடித்துவிட்டு வங்கி தேர்வு எழுதுவதற்காக பயிற்சி பெற்று வந்தார்.
இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு திருமணம் செய்வது என அவரது பெற்றோர்கள் முடிவு செய்து சமீபத்தில், உறவினர்கள் முன்னிலையில் நிச்சயம் செய்தனர். இந்த மாத இறுதியில் திருமணம் தேதி குறிக்கப்பட்டு இருந்ததால், சம்பவத்தன்று திருமணத்திற்கு தேவையான துணிகள் எடுக்க புது மணப்பெண்ணை அவரது பெற்றோர் காந்திபுரத்தில் உள்ள ஜவுளி கடைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, பட்டு புடவைகளை பார்த்து கொண்டிருந்தபோது புதுமணப் பெண் தனது பெற்றோரிடம் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. ஆதலால், சந்தேகமடைந்த பெற்றோர்கள் அவரை அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால், அவர்களது பெண்ணை காணவில்லை என்பதால், பெற்றோர் காட்டூர் காவல் நிலையத்தில் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தனர்.
புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் காணாமல் போனதை குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், திருமணம் பிடிக்காததால் அப்பெண் வீட்டை விட்டு வெளியேறினாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.
ஜவுளிக்கடைக்கு துணி எடுக்க வந்த திருமணம் நிச்சயமான மணப்பெண் திடீரென மாயமானதாக சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு திருமணம் செய்வது என அவரது பெற்றோர்கள் முடிவு செய்து சமீபத்தில், உறவினர்கள் முன்னிலையில் நிச்சயம் செய்தனர். இந்த மாத இறுதியில் திருமணம் தேதி குறிக்கப்பட்டு இருந்ததால், சம்பவத்தன்று திருமணத்திற்கு தேவையான துணிகள் எடுக்க புது மணப்பெண்ணை அவரது பெற்றோர் காந்திபுரத்தில் உள்ள ஜவுளி கடைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, பட்டு புடவைகளை பார்த்து கொண்டிருந்தபோது புதுமணப் பெண் தனது பெற்றோரிடம் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. ஆதலால், சந்தேகமடைந்த பெற்றோர்கள் அவரை அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால், அவர்களது பெண்ணை காணவில்லை என்பதால், பெற்றோர் காட்டூர் காவல் நிலையத்தில் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தனர்.
புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் காணாமல் போனதை குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், திருமணம் பிடிக்காததால் அப்பெண் வீட்டை விட்டு வெளியேறினாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.
ஜவுளிக்கடைக்கு துணி எடுக்க வந்த திருமணம் நிச்சயமான மணப்பெண் திடீரென மாயமானதாக சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.