கோவையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க தமிழக - கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை!

கோவை: கோவையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்கும் வகையில், 100 வாகனங்களை குடிமைப்பொருள் தாசில்தார்கள் தணிக்கை செய்தனர்.


கோவை: கோவையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்கும் வகையில், 100 வாகனங்களை குடிமைப்பொருள் தாசில்தார்கள் தணிக்கை செய்தனர்.

கோவையில் இருந்து கேரளாவிற்கு அடிக்கடி லாரிகள், ஆட்டோக்கள், கார்கள் மூலமாக தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்பட்டு கேரளாவில் அவை பட்டை தீட்டப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவது தொடர்கதையாகி உள்ளது.

இதனிடையே, கோவையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தலைத் தடுப்பதற்காக கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி உத்தரவின் பேரில் கோவை வடக்கு குடிமைப்பொருள் தாசில்தார் சுமதி, தெற்கு தாசில்தார் விமலா, உதவி பங்கீட்டு அலுவலர் சரகம் 1 சகுந்தலா மணி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.



இந்த நிலையில், குடிமைப்பொருள் அலுவலர்கள் 10-க்கும் மேற்பட்டோர் இன்று ஆனைகட்டி அருகே தமிழக கேரள எல்லையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.



இதில் ஆட்டோ, லோடு ஆட்டோ, கார், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள் என கோவையிலிருந்து கேரளா செல்லக்கூடிய அனைத்து வாகனங்களையும் அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்தனர்.



அப்போது, சந்தேகத்திற்கு இடமான நபர்களிடம் ஆர்.சி, இன்சூரன்ஸ் மற்றும் கேரளா செல்வதற்கான காரணத்தையும் முழு விவரங்களையும் வாங்கினர்.



காலை தொடங்கி மாலை வரை இந்த வாகன தணிக்கையில் தாசில்தார்கள் ஈடுபட்டனர். இதில் எந்தவிதமான ரேஷன் அரிசியும் கடத்தப்படவில்லை என்று தெரிந்த பின்பு திரும்பினர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...