திருப்பூர்: மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூரில் ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்: மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூரில் ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 14வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு உடனடியாக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், திருப்பூரில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் இன்று ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இதனையடுத்து, ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்போது, ரயில் நிலையத்தை முற்றுகையிட வந்த பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, ரயில் நிலைய நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 14வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு உடனடியாக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், திருப்பூரில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் இன்று ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இதனையடுத்து, ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்போது, ரயில் நிலையத்தை முற்றுகையிட வந்த பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, ரயில் நிலைய நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.