கோவையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது

கோவை: கோவை ஆனைகட்டி சோதனைச்சாவடியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மினி டெம்போ வேன் ஒன்று வந்தது உடனே அதிகாரிகள் அதிலிருந்தவர்களிடம் விசாரித்தனர்.


கோவை: கோவை ஆனைகட்டி சோதனைச்சாவடியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மினி டெம்போ வேன் ஒன்று வந்தது உடனே அதிகாரிகள் அதிலிருந்தவர்களிடம் விசாரித்தனர்.

அவர்கள், முன்னுக்குப்பின் முரணான பதில் அளிக்கவே சந்தேகமடைந்த அதிகாரிகள் டெம்போவில் சோதனை செய்தனர். அப்போது, அதில் 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்று கொண்டிருப்பதும் தெரிந்தது.

அரிசி கடத்திய பாலக்காட்டைச் சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 29), அன்னூரை சேர்ந்த பிரகாஷ் (26), ரமேஷ் (26) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வாகனம் மற்றும் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...