கோவை: கோவை கிணத்துக்கடவு மின் நிலையம் முன்பு சமையல் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி சாலையோரத்தில் சாய்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில், லாரியை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு மின் நிலையம் முன்பு சமையல் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி சாலையோரத்தில் சாய்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில், லாரியை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ள பெரியகளந்தை பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சமையல் எரிவாயு நிரப்பும் இடத்திலிருந்து லாரி மூலம் 200க்கும் மேற்பட்ட சமையல் சிலிண்டர் உடன் லாரி ஒன்று கோவை நோக்கி இன்று மதியம் வந்து கொண்டிருந்தது.

அப்போது, கிணத்துக்கடவு மின் நிலையம் அருகே வந்தபோது திடீரென லாரி சாலையோரத்தில் இருந்த குழியில் இறங்கி சாய்ந்தது.

சிலின்டருடன் சாய்ந்த லாரி அருகில் இருந்த வீட்டின் மீதும் சாய்ந்து உள்ளதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் பளு தூக்கும் இயந்திரம் மூலம் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
கிணத்துக்கடவு அருகே உள்ள பெரியகளந்தை பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சமையல் எரிவாயு நிரப்பும் இடத்திலிருந்து லாரி மூலம் 200க்கும் மேற்பட்ட சமையல் சிலிண்டர் உடன் லாரி ஒன்று கோவை நோக்கி இன்று மதியம் வந்து கொண்டிருந்தது.
அப்போது, கிணத்துக்கடவு மின் நிலையம் அருகே வந்தபோது திடீரென லாரி சாலையோரத்தில் இருந்த குழியில் இறங்கி சாய்ந்தது.
சிலின்டருடன் சாய்ந்த லாரி அருகில் இருந்த வீட்டின் மீதும் சாய்ந்து உள்ளதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் பளு தூக்கும் இயந்திரம் மூலம் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.