கோவை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் விரோத சட்டங்களை கண்டித்தும் அச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த 13 நாட்களாகதொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் விரோத சட்டங்களை கண்டித்தும் அச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த 13 நாட்களாகதொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் நடைபெற்று வருவதற்கு, எதிர்கட்சிகள் மற்றும் பல தொழில்துறையினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன்படி, கோவை மாவட்ட மக்கள் நீதி மைய்யத்தினர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மத்திய அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பியவர்கள், இதில் மத்திய அரசு உடனடியாக இச்சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மத்திய அரசு இச்சட்டங்களை திரும்பி பெறவில்லை என்றால் மக்கள் நீதி மைய்யத்தினர் அனைவரும் ஒன்று திரண்டு டெல்லிக்குசெல்வோம் என்று தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுகுழு உறுப்பினர் தங்கவேல், மாநில மண்டல அமைப்பாளர் ரங்கநாதன், மாநில செயலாளர் விவசாய அணி, டாக்டர் மயில்சாமிி, செய்தி மற்றும் ஊடகம் துனை செயலாளர் பங்கஜ் சுரபி மற்றும் மகளிர் அணியினர் நகர செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், வட்ட செயலாளர் கள் சார்பு அணியினர் என பலரும் கலந்துகொண்டனர்.