கோவை: கோவையில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பீளமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பீளமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பீளமேடு, நேரு நகர், புஷ்பம் கார்டனை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் அந்த பகுதியில் சொந்தமாக சாப்ட்வேர் நிறுவனம் வைத்து தொழில் நடத்தி வருகிறார். தினமும், அவரும் அவரது மனைவியும், வீட்டை பூட்டி விட்டு கம்பெனிக்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில், நேற்று பகல் சதீஷ்குமார் தனது மனைவியுடன், வழக்கம்போல் கம்பெனிக்கு சென்றுவிட்டு, வேலை முடிந்துவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்தனர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியான, சதீஷ்குமார் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது, வீட்டில் பீரோ திறந்து கிடந்துள்ளது. அதில் இருந்த துணிகள், அனைத்தும் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன, மேலும் பீரோவில் இருந்த வைர நெக்லஸ், செயின், மோதிரம், வளையல் உட்பட 50 பவுன் தங்க நகைகள் ரூபாய் 2 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை காணாமல் போய் இருந்தது.
கணவன் மனைவி இரண்டு பேரும் வேலைக்கு சென்ற நேரத்தில், வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் நகை பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து, சதீஷ்குமார் பீளமேடு போலீசில் புகார் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில், ஏதேனும் மர்ம நபர்கள் நடமாட்டம் பதிவாகி இருக்கிறதா? என்பதையும் கண்காணித்து கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பணம் கொள்ளை அடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவை பீளமேடு, நேரு நகர், புஷ்பம் கார்டனை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் அந்த பகுதியில் சொந்தமாக சாப்ட்வேர் நிறுவனம் வைத்து தொழில் நடத்தி வருகிறார். தினமும், அவரும் அவரது மனைவியும், வீட்டை பூட்டி விட்டு கம்பெனிக்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில், நேற்று பகல் சதீஷ்குமார் தனது மனைவியுடன், வழக்கம்போல் கம்பெனிக்கு சென்றுவிட்டு, வேலை முடிந்துவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்தனர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியான, சதீஷ்குமார் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது, வீட்டில் பீரோ திறந்து கிடந்துள்ளது. அதில் இருந்த துணிகள், அனைத்தும் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன, மேலும் பீரோவில் இருந்த வைர நெக்லஸ், செயின், மோதிரம், வளையல் உட்பட 50 பவுன் தங்க நகைகள் ரூபாய் 2 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை காணாமல் போய் இருந்தது.
கணவன் மனைவி இரண்டு பேரும் வேலைக்கு சென்ற நேரத்தில், வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் நகை பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து, சதீஷ்குமார் பீளமேடு போலீசில் புகார் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில், ஏதேனும் மர்ம நபர்கள் நடமாட்டம் பதிவாகி இருக்கிறதா? என்பதையும் கண்காணித்து கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பணம் கொள்ளை அடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.