விவசாயிகளின் பாரத் பந்த்: கோவையில் உழவர் சந்தை, சிறு குறு வியாபாரிகள் ஆதரவு; 50% கடைகள் வழக்கம் போல் இயங்கி வருகிறது

கோவை: மத்திய அரசு இயற்றி உள்ள வேளான் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.



கோவை: மத்திய அரசு இயற்றி உள்ள வேளான் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவையில் உழவர் சந்தை, சிறு, குறு கடை வியாபாரிகள் நாடு தழுவிய போராட்டதிற்க்கு ஆதரவு தெரிவித்து கடைகளை அடைத்து உள்ளனர். ஆனால், சில பகுதிகளில் வழக்கம் போல் கடைகள் செயலபட்டு வருகின்றன.



குறிப்பாக, கோவை டவுன்ஹால், பெரியகடை வீதி, உப்புகிணறு வீதி உட்பட நகரின் முக்கிய பகுதிகளில் சிறு, குறு வியாபாரிகள் கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.



இதேபோல், நடைபாதை வியாபாரிகளும் கடைகளை அடைத்து ஆதரவினை தெரிவித்து உள்ளனர்.



அதேபோல, காந்திபுரம் பகுதியில் செயல்படும் செல்போன் உதிரிபாக விற்பனையாளர்கள் 500க்கும் மேற்பட்டவர்களும் கடைகள் அடைத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

அதே வேளையில், தனியார் மற்றும் அரசு போக்குவரத்து பேருந்துகள் குறைந்த அளவே இயங்கி வரும் நிலையில், பயணிகளும் குறைவாகவே காணபட்டனர். கோவையில், 90% ஆட்டோக்களும் இயங்கவில்லை.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...