பொள்ளாச்சி: வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி நடக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு, பொள்ளாச்சியில் 30% வணிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். வழக்கம்போல், பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் இயங்கவில்லை.
பொள்ளாச்சி: வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி நடக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு, பொள்ளாச்சியில் 30% வணிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். வழக்கம்போல், பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் இயங்கவில்லை.
மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில், பொள்ளாச்சியில் கடைவீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

முழு அடைப்பு போராட்டத்திற்கு பொள்ளாச்சியில் 30% வணிகர்கள் ஆதரவு தெரிவித்து கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர்.

இருப்பினும், ஆட்டோக்கள், பேருந்துகள் வழக்கம் போல இயங்கி வருகின்றன.

மக்கள் அதிகம் கூடும் பொள்ளாச்சி பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில், பொள்ளாச்சியில் கடைவீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
முழு அடைப்பு போராட்டத்திற்கு பொள்ளாச்சியில் 30% வணிகர்கள் ஆதரவு தெரிவித்து கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர்.
இருப்பினும், ஆட்டோக்கள், பேருந்துகள் வழக்கம் போல இயங்கி வருகின்றன.
மக்கள் அதிகம் கூடும் பொள்ளாச்சி பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.