கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட துடியலூர் சுப்பிரமணியம்பாளையம் மற்றும் வெள்ளக்கிணறு பகுதிகளில் அம்ருத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட துடியலூர் சுப்பிரமணியம்பாளையம் மற்றும் வெள்ளக்கிணறு பகுதிகளில் அம்ருத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பில்லூர் நீராதாரம் மூலம் கோவை மாநகராட்சிக்கு வழங்கப்படும் மொத்த குடிநீரின் அளவு போதுமானதாக இருந்த போதிலும் புதிதாக இணைக்கப்பட்ட துடியலூர், வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, விளாங்குறிச்சி மற்றும் காளப்பட்டி ஆகிய 6 பகுதிகளில் தற்போதைய குடிநீர் விநியோக அளவு நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 70 லிட்டர் என்ற விகிதத்தில் 6 நாள் முதல் 8 நாட்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சீரான கூடுதல் குடிநீர் விநியோகிக்க உள்கட்டமைப்பு அமைத்து தொட்டிகளுக்கு நீர் ஏற்றப்பட்டு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.
மேலும், புதிதாக வீட்டு இணைப்புகள் குடியிருப்புகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் நடைபெறுவதை துடியலூர் சுப்பிரமணியம் பாளையம் மற்றும் வெள்ளக்கிணறு பகுதிகளில் வீடுகளுக்கு பில்லூர் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்ட ஆணையாளா் அவர்கள் இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு தெரிவித்தார்.
மேலும், குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட இடங்களில் பைப்புகள் ஏதேனும் பழுதடைந்திருந்தால் உடனடியாக சரிசெய்து குடிநீர் வெளியேறா வண்ணம் மற்றும் கசிவு ஏற்படா வண்ணம் குழிகளை மூடப்பட வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, தடாகம் ரோடு, பெரியசாமி சாலை, வெங்கிடசாமி சாலை, டி.பி.ரோடு, பொன்னுரங்கம் ரோடு, திருவேங்கடசாமி சாலை ஆகிய பகுதிகளில் 24 மணி நேரம் குடிநீர் வழங்க மீட்டர் இணைப்பு பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்ட ஆணையாளர் அவர்கள் குடிநீர் விநியோகத்திற்காக முடிக்கப்பட்ட இடங்களில் உடனடியாக தார்சாலை அமைக்க தொடர்புடைய அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.
இவ்வாய்வின்போது, செயற்பொறியாளர் (24X7 குடிநீர் திட்டம்) பார்வதி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் விவேகானந்தம், உதவி நிர்வாக பொறியாளர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் விஜியலட்சுமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
பில்லூர் நீராதாரம் மூலம் கோவை மாநகராட்சிக்கு வழங்கப்படும் மொத்த குடிநீரின் அளவு போதுமானதாக இருந்த போதிலும் புதிதாக இணைக்கப்பட்ட துடியலூர், வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, விளாங்குறிச்சி மற்றும் காளப்பட்டி ஆகிய 6 பகுதிகளில் தற்போதைய குடிநீர் விநியோக அளவு நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 70 லிட்டர் என்ற விகிதத்தில் 6 நாள் முதல் 8 நாட்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சீரான கூடுதல் குடிநீர் விநியோகிக்க உள்கட்டமைப்பு அமைத்து தொட்டிகளுக்கு நீர் ஏற்றப்பட்டு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.
மேலும், புதிதாக வீட்டு இணைப்புகள் குடியிருப்புகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் நடைபெறுவதை துடியலூர் சுப்பிரமணியம் பாளையம் மற்றும் வெள்ளக்கிணறு பகுதிகளில் வீடுகளுக்கு பில்லூர் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்ட ஆணையாளா் அவர்கள் இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு தெரிவித்தார்.
மேலும், குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட இடங்களில் பைப்புகள் ஏதேனும் பழுதடைந்திருந்தால் உடனடியாக சரிசெய்து குடிநீர் வெளியேறா வண்ணம் மற்றும் கசிவு ஏற்படா வண்ணம் குழிகளை மூடப்பட வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, தடாகம் ரோடு, பெரியசாமி சாலை, வெங்கிடசாமி சாலை, டி.பி.ரோடு, பொன்னுரங்கம் ரோடு, திருவேங்கடசாமி சாலை ஆகிய பகுதிகளில் 24 மணி நேரம் குடிநீர் வழங்க மீட்டர் இணைப்பு பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்ட ஆணையாளர் அவர்கள் குடிநீர் விநியோகத்திற்காக முடிக்கப்பட்ட இடங்களில் உடனடியாக தார்சாலை அமைக்க தொடர்புடைய அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.
இவ்வாய்வின்போது, செயற்பொறியாளர் (24X7 குடிநீர் திட்டம்) பார்வதி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் விவேகானந்தம், உதவி நிர்வாக பொறியாளர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் விஜியலட்சுமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.