திருப்பூர்: வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி திருப்பூரில் நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் அமைப்பு ஆதரவு!
திருப்பூர்: வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி திருப்பூரில் நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்குபல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி, நாளை நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்றுமதியாளர்கள் மற்றும் வேர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 11வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் விவசாய சங்கத்தினர் சார்பாக நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஆதரவாக, நாளை நடைபெறும் நாடு தழுவிய முழு வேலை நிறுத்தத்திற்கு வேர்கள் அமைப்பு முழு ஆதரவை அளிப்பதாக தெரிவித்துள்ளது.
அதேபோல, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் நாளை நடைபெற உள்ள விவசாயிகளுக்கு ஆதரவான முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக அதன் தலைவர் முத்து ரத்தினம் தெரிவித்துள்ளார்.
"ஜவுளித் தொழிலின் மூலதனமே பருத்தி தான் பருத்தி விளைவிப்பது விவசாயிகள் ஆகையால் நாங்கள் இதற்கு ஆதரிக்கிறோம்", என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாளை நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்றுமதியாளர்கள் மற்றும் வேர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 11வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் விவசாய சங்கத்தினர் சார்பாக நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஆதரவாக, நாளை நடைபெறும் நாடு தழுவிய முழு வேலை நிறுத்தத்திற்கு வேர்கள் அமைப்பு முழு ஆதரவை அளிப்பதாக தெரிவித்துள்ளது.
அதேபோல, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் நாளை நடைபெற உள்ள விவசாயிகளுக்கு ஆதரவான முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக அதன் தலைவர் முத்து ரத்தினம் தெரிவித்துள்ளார்.
"ஜவுளித் தொழிலின் மூலதனமே பருத்தி தான் பருத்தி விளைவிப்பது விவசாயிகள் ஆகையால் நாங்கள் இதற்கு ஆதரிக்கிறோம்", என்று அவர் தெரிவித்துள்ளார்.