திருப்பூரில் ரேஷன் கடை முறைகேட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட விற்பனையாளர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

திருப்பூர்: திருப்பூரில் ரேஷன் கடையில் முறைகேட்டில் ஈடுபட்டதால் இடைநீக்கம் செய்யப்பட்ட விற்பனையாளர் மீது உணவு பாதுகாப்பு துறை சார்பில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் ரேஷன் கடையில் முறைகேட்டில் ஈடுபட்டதால் இடைநீக்கம் செய்யப்பட்ட விற்பனையாளர் மீது உணவு பாதுகாப்பு துறை சார்பில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் பழனிச்சாமி நகர் பகுதியில் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்த ராஜேஸ்வரி என்பவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியதை அடுத்து, அவர் அங்கேரிபாளையம் சாலையில் உள்ள ரேஷன் கடைக்கு மாற்றப்பட்டார்.

உணவு பாதுகாப்புத்துறை விசாரணையில் ராஜேஸ்வரி முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து, அவர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், முறைகேடு உறுதிப்படுத்தப்பட்ட பின்னும் உணவு பாதுகாப்பு துறை சார்பாக இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை எனவும் உடனடியாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், போயம்பாளையம் பழனிச்சாமி நகர் ரேஷன் கடையில் 1350 ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், அவற்றை இரண்டு கடைகளாக பிரிக்க வேண்டுமென வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...