கோவை: நீலகிரியில் எட்டு மாதங்களுக்கு பின், இன்று முதல் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டது. முக கவசம், சமூக இடைவெளியுடன் சுற்றுலா இடங்களுக்கு கண்டு ரசிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை: நீலகிரியில் எட்டு மாதங்களுக்கு பின், இன்று முதல் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டது. முக கவசம், சமூக இடைவெளியுடன் சுற்றுலா இடங்களுக்கு கண்டு ரசிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம், உலக அளவில் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். ஆண்டுக்கு, 33 லட்சம் சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து சென்ற நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 21ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் அனுமதியின்றி அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பி வாழ்ந்த சுமார் 22 ஆயிரம் குடும்பங்கள் கடந்த 9 மாத காலமாக வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தனர்.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம், கோடநாடு காட்சி முனை, பைக்காரா படகு இல்லம் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து தலங்களும் இன்று முதல் முழுமையாக திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

சுற்றுலா தலங்கள், திறக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொட்டபெட்டா காட்சி முனையை இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முறையாக முகக் கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி இயற்கை அழகை ரசித்து செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
குறிப்பாக, ஒன்பது மாதம் கழித்து சுற்றுலா தலங்கள் திறக்கப்படுவதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே, முதுமலை புலிகள் காப்பகம் உட்பட வனத்துறைக்கு சொந்தமான சூழல் சுற்றுலா தலங்கள் இன்னும் திறக்கப்படாதால், நீலகிரிக்கு யானை சவாரி, வனவிலங்குகளை கண்டு ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம், உலக அளவில் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். ஆண்டுக்கு, 33 லட்சம் சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து சென்ற நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 21ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் அனுமதியின்றி அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பி வாழ்ந்த சுமார் 22 ஆயிரம் குடும்பங்கள் கடந்த 9 மாத காலமாக வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தனர்.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம், கோடநாடு காட்சி முனை, பைக்காரா படகு இல்லம் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து தலங்களும் இன்று முதல் முழுமையாக திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

சுற்றுலா தலங்கள், திறக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொட்டபெட்டா காட்சி முனையை இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முறையாக முகக் கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி இயற்கை அழகை ரசித்து செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
குறிப்பாக, ஒன்பது மாதம் கழித்து சுற்றுலா தலங்கள் திறக்கப்படுவதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே, முதுமலை புலிகள் காப்பகம் உட்பட வனத்துறைக்கு சொந்தமான சூழல் சுற்றுலா தலங்கள் இன்னும் திறக்கப்படாதால், நீலகிரிக்கு யானை சவாரி, வனவிலங்குகளை கண்டு ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.