கோவை: மானிய வரம்பை புதிய வரையறைக்கு ஏற்ப 25 லட்சத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க போசியா, வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோவை: மானிய வரம்பை புதிய வரையறைக்கு ஏற்ப 25 லட்சத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க போசியா, வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் போசியா, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:
குறு மற்றும் சிறு தொழில்கள் இன்னும் முழுமையான இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. குறும் தொழிற்சாலைகளுக்கு இயந்திர முதலீட்டுத் தொகைக்கு கிரிடிட் லிங்கில் கேபிடல் சப்சிடி (Capital Subsidy) திட்டத்தின் மூலம், தமிழக அரசு 25 சதவீத மானியம் வழங்கி வருகிறது. இந்த மானியம் 25 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசு சிறு குறு நடுத்தர தொழில்களுக்கான வரையறைகளை சமீபத்தில் மாற்றி அமைத்துள்ளது.
அதன்படி, குறுந்தொழில்கள் 1 கோடி ரூபாய் வரை இயந்திரம் மற்றும் தளங்களில் முதலீடு செய்யலாம். எனவே, தமிழக அரசு முதலீடு மானிய உச்சவரம்பை புதிய வரையறைக்கு ஏற்ப, தற்போது உள்ள 25 லட்சத்தில் இருந்து 1 கோடி ரூபாயாக உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும். இதன் வாயிலாக குறுந்தொழில்கள் பெரிதும் பயன் பெறுவதுடன் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பவும் வழிவகுக்கும், இவ்வாறு முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் போசியா, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:
குறு மற்றும் சிறு தொழில்கள் இன்னும் முழுமையான இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. குறும் தொழிற்சாலைகளுக்கு இயந்திர முதலீட்டுத் தொகைக்கு கிரிடிட் லிங்கில் கேபிடல் சப்சிடி (Capital Subsidy) திட்டத்தின் மூலம், தமிழக அரசு 25 சதவீத மானியம் வழங்கி வருகிறது. இந்த மானியம் 25 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசு சிறு குறு நடுத்தர தொழில்களுக்கான வரையறைகளை சமீபத்தில் மாற்றி அமைத்துள்ளது.
அதன்படி, குறுந்தொழில்கள் 1 கோடி ரூபாய் வரை இயந்திரம் மற்றும் தளங்களில் முதலீடு செய்யலாம். எனவே, தமிழக அரசு முதலீடு மானிய உச்சவரம்பை புதிய வரையறைக்கு ஏற்ப, தற்போது உள்ள 25 லட்சத்தில் இருந்து 1 கோடி ரூபாயாக உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும். இதன் வாயிலாக குறுந்தொழில்கள் பெரிதும் பயன் பெறுவதுடன் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பவும் வழிவகுக்கும், இவ்வாறு முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.