பொள்ளாச்சி பகுதிகளில் ஆர்வமுடன் கல்லூரிகளுக்கு வந்த மாணவர்கள்..! பேருந்து வசதியை அதிகரிக்க கோரிக்கை

பொள்ளாச்சி: கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் மூடப்பட்டது. அரசு ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அறிவித்த போதும், மாணவர்களின் நலன் கருதி கல்லூரிகள் திறக்கப்படாமலேயே,வ்ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர்.

பொள்ளாச்சி: கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் மூடப்பட்டது. அரசு ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அறிவித்த போதும், மாணவர்களின் நலன் கருதி கல்லூரிகள் திறக்கப்படாமலேயே,வ்ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர். 



தற்போது, தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால், உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கல்லூரிகளை திறக்க அரசு உத்தரவு பிறப்பித்தது. 



இதனையடுத்து, இன்று பொள்ளாச்சியில் அரசு, பாரதியார் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகள் திறக்கப்பட்டது. காலை முதலே, மாணவர்கள் ஆர்வமுடன் கல்லூரிக்கு வந்தனர். கல்லூரி நுழைவாயில் முன்பு, மாணவர்களுக்கு சேனிடைசர் மற்றும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 



மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, வகுப்பறைக்குள் ஒரு நாற்காலி இடைவெளி விட்டு மாணவர்கள் அமர்ந்து பாடங்களை கற்று வருகின்றனர். பொள்ளாச்சியில் பெரும்பாலான மாணவர்கள் கிராம பகுதிகளில் இருந்து கல்லூரிக்கு வருவதால், கல்லூரி திறக்கப்பட்டதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், தற்போது போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், கல்லூரிக்கு வருவதில் சிக்கல் உள்ளதால், காலை மற்றும் மாலை நேரங்களில் பொள்ளாச்சியில் இருந்து கிராமபுரங்களுக்கு செல்லும் பேருந்துகளை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...