கோவை: கோவை மத்திய சிறையில் விசாரணை கைதி ஒருவர் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை மத்திய சிறையில் விசாரணை கைதி ஒருவர் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அக்கிரகாரம், அன்னை சந்தியா நகரை சேர்ந்தவர் ரவி (41). இவர், திருட்டு வழக்கு ஒன்றில் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு, ரவி பவானி சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து, அக்டோபர் 17-ம் தேதி கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
விசாரணைக் கைதியான ரவி நேற்று அதிகாலை 2 மணி அளவில் தனது சிறை அறைக்குள் நடந்து கொண்டிருந்தார். சக கைதிகள் இது குறித்து விசாரித்த பொது, தனக்கு நெஞ்சு எரிச்சல் உள்ளதால் நடப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ரவி திடீரென சுருண்டு மயங்கி கீழே விழுந்தார். முதலுதவிக்கு பின், ரவி கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கோவை மத்திய சிறையில், விசாரணை கைதி ஒருவர் உடல்நிலக்குறைவால் இறந்ததால், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அக்கிரகாரம், அன்னை சந்தியா நகரை சேர்ந்தவர் ரவி (41). இவர், திருட்டு வழக்கு ஒன்றில் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு, ரவி பவானி சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து, அக்டோபர் 17-ம் தேதி கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
விசாரணைக் கைதியான ரவி நேற்று அதிகாலை 2 மணி அளவில் தனது சிறை அறைக்குள் நடந்து கொண்டிருந்தார். சக கைதிகள் இது குறித்து விசாரித்த பொது, தனக்கு நெஞ்சு எரிச்சல் உள்ளதால் நடப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ரவி திடீரென சுருண்டு மயங்கி கீழே விழுந்தார். முதலுதவிக்கு பின், ரவி கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கோவை மத்திய சிறையில், விசாரணை கைதி ஒருவர் உடல்நிலக்குறைவால் இறந்ததால், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.