பஸ் பாஸ் மாணவர்களிடம் இன்முகத்துடன் நடந்து கொள்ளுங்கள். கோவையில் டிரைவர், கண்டக்டருக்கு அறிவுரை..!

கோவை: இன்றுமுதல் உயர்கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் நிலையில், சலுகை பாஸ் பயன்படுத்தும் மாணவர்கள் மனம் புண்படாத வகையில் இன்முகத்துடன் பணிபுரிய வேண்டும் என அரசு பஸ் டிரைவர், கண்டக்டருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை: இன்றுமுதல் உயர்கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் நிலையில், சலுகை பாஸ் பயன்படுத்தும் மாணவர்கள் மனம் புண்படாத வகையில் இன்முகத்துடன் பணிபுரிய வேண்டும் என அரசு பஸ் டிரைவர், கண்டக்டருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக பல்கலைக்கழகம் கல்லூரிகளில் முதுநிலை இறுதியாண்டு ஆராய்ச்சி மாணவர்களுக்கு, கடந்த வாரம் வகுப்புகள் துவங்கின. இன்று முதல், இளநிலை இறுதியாண்டு கலை, அறிவியல், இன்ஜினியரிங், வேளாண்மை, தொழில்நுட்ப கல்லூரிகள், பல்கலைக் கழக மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்குகின்றன. 

சுமார், 8 மாதங்களுக்குப் பிறகு மாணவர்கள் பஸ்களில் பயணித்து வருகின்றனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகையால் பஸ்களில் பழையபடி நெரிசல் ஏற்படும் என்பதால் கண்டக்டர்கள் கடிந்து கொள்ளாமல் இன்முகத்துடன் பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரி கூறுகையில்:- கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் பயணிகளிடம் கனிவான அணுகுமுறையும், வழிநடத்தலும் அவசியம். கண்டக்டர்கள் சிலர் மாணவர்களை கடிந்து கொள்வதாகவும், டிரைவர்கள் ஸ்டாப்பில் நிறுத்துவதில்லை என புகார்களும் வருவதுண்டு. இனி, இவற்றை தவிர்த்து பஸ் பாஸ் சரிபார்த்து அவர்கள் மனம் புண்படாத வகையில் இன்முகத்துடன் பணிபுரிய டிரைவர் கண்டக்டருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதேசமயம், நோயை கட்டுப்படுத்த உள்ளிட்ட வழிகாட்டுதல்களை பயணிகள் அனைவரும் கடைபிடிப்பது அவசியம், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...