திருப்பூரில் குண்டும் குழியுமான சாலைகளில் நாற்று நட்டு பொது மக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்..!

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் குண்டும் குழியுமான சாலைகளை சீர் செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் குண்டும் குழியுமான சாலைகளை சீர் செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 54 வது வார்டுு, கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்து மழை நேரங்களில் மழை நீர் தேங்கி நின்று குளம் போல காட்சி அளிக்கின்றது. இதனால், அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதாகவும், இதனால் அப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுவதை பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லைை, என அப்பகுதி பொது மக்கள் குற்றம்சாட்டி வந்தனர். 



இருப்பினும், இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இன்று அப்பகுதியில் சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டும், ஆண்கள் கையில் காயம் அடைந்தது போல கட்டுகள் அணிந்தும், நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...