கோவையில் வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சாலை மறியல்..! 200 க்கும் மேற்பட்டோர் கைது

கோவை: மத்திய அரசு இயற்றியுள்ள மூன்று வேளான் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

கோவை: மத்திய அரசு இயற்றியுள்ள மூன்று வேளான் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.



இதன் ஒரு பகுதியாக, கோவை காந்திபுரம் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தபடும் என அறிவிக்கபட்டது. இதனையடுத்து, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கோவை காந்திபுரம் அரசு விரைவு பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 



அப்போது, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் வேளான் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும், என வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது, இந்திய மாணவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், வலுகட்டாயமாக மறியலில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டனர். 



இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.பி.ஐ சார்பில் மாவட்ட செயலாளர், சுந்தரம், மாநில பொது செயல்லாளர், ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர்கள் சிவசாமி, தேவராஜ், சி.பி.ஐ(எம்) சார்பில் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மாநில குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...