கோவை: திமுக மக்களவை உறுப்பினரும் மகளிர் அணி செயலாளருமான கனிமொழி விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சார பயணம் மேற்கொண்டு உள்ளார்.
கோவை: திமுக மக்களவை உறுப்பினரும் மகளிர் அணி செயலாளருமான கனிமொழி விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சார பயணம் மேற்கொண்டு உள்ளார்.

கோவையில் பல்வேறு பகுதிகளில் பிரச்சார பயணம் மேற்கொண்டு வரும், திமுகவின் மகளிர் அணி செயலாளர் எம்.பி கனிமொழி, இன்று காலை தேவாங்க பள்ளியில் செயல்பட்டு வரும் விவசாயிகளை சந்தித்து ஆதரவு கேட்டார். இதன் பின்னர், ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை சென்ற அவர் அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது, அங்கிருந்து விவசாயிகள் உழவர் சந்தைக்கு விளை பொருட்களை எடுத்து வருவதில் போக்குவரத்தில் சிரமம் இருப்பதாகவும், அதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் குறைகளை கேட்டறிந்த, எம் பி கனிமொழி, திமுக ஆட்சி அமையும் பட்சத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார். பிறகு, அங்கிருந்து சொக்கம்புதூர் சென்றவர், அப்பகுதியில் உள்ள வட மாநில மக்களிடையே ஆதரவு கோரினார். இதன் பின்னர், கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் அவர் இன்று மாலை சிறு குறு தொழில் முனைவோருடனான சந்திப்பு, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண அரங்கில் மகளிர் அணியுடனான கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளார்.

கோவையில் பல்வேறு பகுதிகளில் பிரச்சார பயணம் மேற்கொண்டு வரும், திமுகவின் மகளிர் அணி செயலாளர் எம்.பி கனிமொழி, இன்று காலை தேவாங்க பள்ளியில் செயல்பட்டு வரும் விவசாயிகளை சந்தித்து ஆதரவு கேட்டார். இதன் பின்னர், ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை சென்ற அவர் அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது, அங்கிருந்து விவசாயிகள் உழவர் சந்தைக்கு விளை பொருட்களை எடுத்து வருவதில் போக்குவரத்தில் சிரமம் இருப்பதாகவும், அதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் குறைகளை கேட்டறிந்த, எம் பி கனிமொழி, திமுக ஆட்சி அமையும் பட்சத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார். பிறகு, அங்கிருந்து சொக்கம்புதூர் சென்றவர், அப்பகுதியில் உள்ள வட மாநில மக்களிடையே ஆதரவு கோரினார். இதன் பின்னர், கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் அவர் இன்று மாலை சிறு குறு தொழில் முனைவோருடனான சந்திப்பு, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண அரங்கில் மகளிர் அணியுடனான கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளார்.