கோவை: என்ஜினியரிங் அரியர்ஸ் தேர்வு கட்டணங்களை வரும் 10-ம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படும், என தமிழக அரசு அறிவித்தது.
கோவை: என்ஜினியரிங் அரியர்ஸ் தேர்வு கட்டணங்களை வரும் 10-ம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படும், என தமிழக அரசு அறிவித்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அண்ணா பல்கலைகழகம் தனது கட்டுப்பாட்டில் உள்ள உறுப்புக் கல்லூரிகள் மற்றும் இணைப்பு கல்லூரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதில், அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்கள் வரும் 10-ம் தேதிக்குள் அரியர் தேர்வுகளை எழுத கட்டணம் செலுத்த வேண்டும். கடந்த 2012 -ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை கடந்த 8 ஆண்டுகளில் இன்ஜினியரிங் படிப்புகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களும் தேர்வுக்கு விண்ணப்பம் செய்யலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் பிரிவு பாடங்களுக்கான தேர்வு கட்டணங்களை மாணவர்கள் வரும் 20-ம் தேதிக்குள் செலுத்தலாம், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.