பாபரி மஸ்ஜித் நிலத்தை இஸ்லாமியர்களிடம் திருப்பிக் கொடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோவையில் எஸ்.டி.பி.ஐ சார்பில் ஆர்ப்பாட்டம்!

கோவை: வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 ஐ நடைமுறைப்படுத்து, பாபரி மஸ்ஜித் நிலத்தை இஸ்லாமியர்களிடம் திருப்பிக் கொடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் எஸ்.டி.பி.ஐ சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 ஐ நடைமுறைப்படுத்து, பாபரி மஸ்ஜித் நிலத்தை இஸ்லாமியர்களிடம் திருப்பிக் கொடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் எஸ்.டி.பி.ஐ சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடித்த டிசம்பர் 6ம் தேதியான இன்று எஸ்.டி.பி.ஐ (SDPI) கட்சியின் சார்பாக நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.



இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ.சார்பாக ஆத்துப்பாலம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



SDPI கட்சியின் கோவை மாவட்ட தலைவர் ராஜா உசேன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், SDPI கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி, தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் தோழர் கு. ராமகிருட்டினண், நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் மற்றும் கோவை செய்யது ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசே, நீதித்துறையே, வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 ஐ நடைமுறைப்படுத்து, பாபரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடு, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி அவர்கள் கண்டன உரையின்போது பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட சம்பவத்தில், முஸ்லிம்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டதை மறக்காமல் இருக்கவும் வருங்கால தலைமுறைகளுக்கும் பாடர் மசூதியின் வரலாற்றை எடுத்துக்கூறவும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்டி எழுப்பும் வரை நீதிக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்கிற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கத்தின் அடிப்படையில் டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் தினத்தில் நாடு முழுவதும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதாகவும், இழந்ததை மீட்கவும், இருப்பதை காக்கவும் உறுதியுடன் போராடுவோம் என அவர் கூறினார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், வர்த்தக அணி நிர்வாகிகள், தொகுதி மற்றும் கிளை நிர்வாகிகள், பெண்கள் குழந்தைகளோடு கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...