இடியும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும் ஆனைமலை ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை

பொள்ளாச்சி: ஆனைமலை ஒன்றிய குழு கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று முன்தினம் ஆனைமலை ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆனைமலை ஒன்றிய ஆணையாளர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, ஒன்றிய தலைவர் சாந்தி, துணைத்தலைவர் கோபால் ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பொள்ளாச்சி: ஆனைமலை ஒன்றிய குழு கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று முன்தினம் ஆனைமலை ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆனைமலை ஒன்றிய ஆணையாளர்பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.



வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, ஒன்றிய தலைவர் சாந்தி, துணைத்தலைவர் கோபால் ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் கூறுகையில், ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பழைய தொகுப்பு வீடுகள் முற்றிலும் சேதமடைந்து, இடியும் நிலையில் உள்ளது. அவற்றை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி பகுதிகளில் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும். பசுமை வீடு கட்டுவதற்கான ஒதுக்கீடுகளை அதிகரிக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.

முக்கிய துறை அதிகாரிகள் கூட்டதிற்கு வராததால், குறைகளை நிவர்த்தி செய்ய முடியாத சூழல் ஏற்படுவதாகவும், மாவட்ட நிர்வாகம், துறை அதிகாரிகளையும் ஒன்றிய குழு கூட்டத்தில் கலந்துகொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...