கோவை: பாப்ரி மசூதி இடிப்பு தினத்தையொட்டி, இன்று கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, ரயில் மற்றும் விமான நிலையங்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
கோவை: பாப்ரி மசூதி இடிப்பு தினத்தையொட்டி, இன்று கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, ரயில் மற்றும் விமான நிலையங்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அசம்பாவிதங்களை தவிர்க்க, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின் பேரில் கோவை மாநகர பகுதியில் உள்ள முக்கிய இடங்கள் வழிபாட்டுத் தலங்களில் ஆயிரம் போலீசாரும், மாவட்ட எஸ்.பி அருளரசு உத்தரவின்பேரில் மாவட்ட பகுதிகளில் 1200 போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
கோவை ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

ரயில் நிலைய வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், கோவை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்ட கண்காணிக்கப்படுகிறது பயணிகள் தவிர பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
அசம்பாவிதங்களை தவிர்க்க, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின் பேரில் கோவை மாநகர பகுதியில் உள்ள முக்கிய இடங்கள் வழிபாட்டுத் தலங்களில் ஆயிரம் போலீசாரும், மாவட்ட எஸ்.பி அருளரசு உத்தரவின்பேரில் மாவட்ட பகுதிகளில் 1200 போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
கோவை ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
ரயில் நிலைய வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், கோவை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்ட கண்காணிக்கப்படுகிறது பயணிகள் தவிர பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.