கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் குனியமுத்தூர் பகுதிகளில் நீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் குனியமுத்தூர் பகுதிகளில் நீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்கு பின், குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள நீரை உடனடியாக அகற்றி வெட் மிக்ஸ் சாலை போட அலுவலா்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குனியமுத்தார் பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையில், அப்பகுதியில் உள்ள செங்குளம் நிரம்பியது. இதனால், அப்பகுதியில் உள்ள கிணறுகள் நிரம்பி வயல்வெளிகளில் மற்றும் குடியிருப்புகளில் நீர் சூழ்ந்தது.

குறிப்பாக, வசந்தம் கார்டன், கிளாசிக் கார்டன் ஆகிய நீர் சூழ்ந்த பகுதிகளில் ராட்சத மோட்டார் மூலமாக நீரை வெளியேற்றுவதை பார்வையிட்ட அமைச்சர், நீரை வெளியேற்றிய பின்னர், உடனடியாக வெட்மிக்ஸ் சாலைகள் போட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடாந்து வார்டு எண்.88 கங்கா நகர் பகுதிகளில் நீர் சூழ்ந்த பகுதிகளில் நீரை வெளியேற்றி, வெட்மிக்ஸ் சாலைகள் போடப்பட்டுவரும் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
அப்போது, கங்கா நகர் பகுதியில் உடனடியாக நீரை வெளியேற்றி வெட் மிக்ஸ் சாலைகள் போட்டு தந்தமைக்கு அப்பகுதி மக்கள் அமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.
ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன், பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல், தெற்கு மண்டல உதவி ஆணையர்,.டி.ஆர்.ரவி, உதவிப் பொறியாளா்கள், தெற்கு மண்டல சுகாதார அலுவலர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஆய்வுக்கு பின், குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள நீரை உடனடியாக அகற்றி வெட் மிக்ஸ் சாலை போட அலுவலா்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குனியமுத்தார் பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையில், அப்பகுதியில் உள்ள செங்குளம் நிரம்பியது. இதனால், அப்பகுதியில் உள்ள கிணறுகள் நிரம்பி வயல்வெளிகளில் மற்றும் குடியிருப்புகளில் நீர் சூழ்ந்தது.
குறிப்பாக, வசந்தம் கார்டன், கிளாசிக் கார்டன் ஆகிய நீர் சூழ்ந்த பகுதிகளில் ராட்சத மோட்டார் மூலமாக நீரை வெளியேற்றுவதை பார்வையிட்ட அமைச்சர், நீரை வெளியேற்றிய பின்னர், உடனடியாக வெட்மிக்ஸ் சாலைகள் போட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடாந்து வார்டு எண்.88 கங்கா நகர் பகுதிகளில் நீர் சூழ்ந்த பகுதிகளில் நீரை வெளியேற்றி, வெட்மிக்ஸ் சாலைகள் போடப்பட்டுவரும் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
அப்போது, கங்கா நகர் பகுதியில் உடனடியாக நீரை வெளியேற்றி வெட் மிக்ஸ் சாலைகள் போட்டு தந்தமைக்கு அப்பகுதி மக்கள் அமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.
ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன், பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல், தெற்கு மண்டல உதவி ஆணையர்,.டி.ஆர்.ரவி, உதவிப் பொறியாளா்கள், தெற்கு மண்டல சுகாதார அலுவலர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.