கோவை மாநகராட்சியில்‌ வரும் 15ம் தேதி விடுபட்ட வார்டு பகுதிகளில்‌ பாதாள சாக்கடை குழாய்‌ அமைத்தல்‌ கருத்து கேட்பு கூட்டம்‌!

கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில்‌ பாதாள சாக்கடை திட்டம்‌ செயல்படுத்துவது தொடர்பாக, பொதுமக்களிடம்‌ கருத்து கேட்புக்‌ கூட்டம்‌ வரும் டிசம்பர் 15ம் தேதியன்று நடத்தப்படுகிறது.


கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில்‌ பாதாள சாக்கடை திட்டம்‌ செயல்படுத்துவது தொடர்பாக, பொதுமக்களிடம்‌ கருத்து கேட்புக்‌ கூட்டம்‌ வரும் டிசம்பர் 15ம் தேதியன்று நடத்தப்படுகிறது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ ஏற்கனவே பாதாள சாக்கடை குழாய்‌ அமைக்கும்‌ பணி நடைபெற்று வருகிறது. இதில்‌ மாநகராட்சி மூலம்‌ பாதாள சாக்கடை குழாய்‌ அமைக்கப்படாமல்‌ விடுபட்ட சிங்காநல்லூர்‌, ஒண்டிப்புதூர்‌ மற்றும்‌ பீளமேடு ஆகிய பகுதிகளிலும்‌, புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில்‌ வடவள்ளி, வீரகேரளம்‌, கவுண்டம்பாளையம்‌ மற்றும்‌ துடியலூர்‌ ஆகிய பகுதிகளில்‌ தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியம்‌ மூலமும்‌ புதிதாக சாக்கடை குழாய்‌ அமைக்கும்‌ திட்டம்‌ செயல்படுத்தப்படவுள்ளது.

இது தொடா்பாக பொதுமக்கள்‌ கருத்துக்களை கேட்கும்‌ கலந்தாய்வு கூட்டம்‌ சரவணம்பட்டி, துடியலூர்‌ பகுதிக்கான கூட்டம்‌ 15.12.2020 அன்று துடியலூர் S.S.கமலேஷ்‌ கல்யாண மண்டபத்தில்‌ காலை 10.00 மணி முதல்‌ 11.30 மணி வரை நடைபெறவுள்ளது.

வடவள்ளி, வீரகேரளம்‌ பகுதிக்கான கலந்தாய்வு கூட்டம்‌ K.C.கல்யாண மண்டபம்‌, கல்வீரம்‌ பாளையத்தில்‌ மதியம்‌ 12.00 மணி முதல்‌ 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

மேலும்‌ சிங்காநல்லூர்‌, ஒண்டிப்புதூர்‌ மற்றும்‌ பீளமேடு பகுதிக்கான கருத்து கேட்கும்‌ கலந்தாய்வு கூட்டம்‌ 15.12.2020 அன்று மணி மஹாலில்‌ (மணிஸ்‌ தியேட்டா்‌ அருகில்‌ ESI சாலை) மாலை 4.00 மணி முதல்‌ 5.00 மணி வரை நடைபெறவுள்ளது. குடிநீர்‌ வடிகால்‌ வாரிய அதிகாரிகள்‌ மற்றும்‌ மாநகராட்சி அதிகாரிகள்‌ பங்கேற்கின்றனர்‌. பொதுமக்கள்‌ தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்‌ என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...