கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை குனியமுத்தூரைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இவர் அந்த பகுதியில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு குனியமுத்தூர் மைல்கல்லை சேர்ந்த பைசல் (31), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இரண்டு பேரும் வெளியூருக்கு சென்று அறை எடுத்து தங்கி உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
இந்த நிலையில், பைசல் இளம்பெண்ணை அடிக்கடி உல்லாசமாக இருக்க அழைத்து தொந்தரவு கொடுத்து வந்தார். இதனால் இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் பேசுவதையும் வெளியே செல்வதையும் தவிர்த்து வந்தார். வெளியே வர மறுத்ததால் பைசலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அவர் இளம் பெண்ணை சந்தித்து ஜாலியாக இருக்க வரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். மேலும் பல்வேறு இடங்களுக்குச் சென்று தனிமையில் இருக்கும் போது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண் இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பைசலை இன்று காலை கைது செய்தனர். பின்னர் அவரை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை குனியமுத்தூரைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இவர் அந்த பகுதியில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு குனியமுத்தூர் மைல்கல்லை சேர்ந்த பைசல் (31), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இரண்டு பேரும் வெளியூருக்கு சென்று அறை எடுத்து தங்கி உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
இந்த நிலையில், பைசல் இளம்பெண்ணை அடிக்கடி உல்லாசமாக இருக்க அழைத்து தொந்தரவு கொடுத்து வந்தார். இதனால் இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் பேசுவதையும் வெளியே செல்வதையும் தவிர்த்து வந்தார். வெளியே வர மறுத்ததால் பைசலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அவர் இளம் பெண்ணை சந்தித்து ஜாலியாக இருக்க வரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். மேலும் பல்வேறு இடங்களுக்குச் சென்று தனிமையில் இருக்கும் போது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண் இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பைசலை இன்று காலை கைது செய்தனர். பின்னர் அவரை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.