கோவை: கோவை விமான நிலையத்தில் சூட்கேசில் மறைத்து கடத்த முயன்ற 5.5 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை விமான நிலையத்தில் சூட்கேசில் மறைத்து கடத்த முயன்ற 5.5 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து வளைகுடா நாடான சாஸ்தாவிற்கு தினசரி ஏர் அரேபியா விமானம் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை 4.10 மணிக்கு ஏர் அரேபியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. சார்ஜாவுக்கு செல்வதற்காக முன்பதிவு செய்திருந்த பயணிகள் விமான நிலையத்திற்கு வரிசையாக வந்து கொண்டிருந்தனர். அவர்களது உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.
அப்போது, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நாகரத்தினம் (44), என்பவரது நடவடிக்கை மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. சூட்கேசை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஸ்கேனர் உதவியுடன் சோதனை செய்தனர். சோதனையில் நாகரத்தினம் சூட்கேஸின் அடிப்பகுதியில் மெத் எனப்படும் போதைப் பொருட்களை மறைத்து வைத்து விமானத்தில் சார்ஜாவுக்கு கடத்திச் செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சூட்கேசில் இருந்த இரண்டு பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒன்றரை கிலோ போதைப் பொருளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். சர்வதேச அளவில் இதன் மதிப்பு ரூபாய் 5.5 கோடி என்பது தெரியவந்தது.
பின்னர் நாகரத்தினத்தைப் பிடித்து பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர். அப்போது நாகரத்தினம் பாதுகாப்பு படையினரிடம் கூறியதாவது:-
நான் சார்ஜாவிற்கு செல்வதற்காக வந்தேன். அப்போது விமான நிலையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த நண்பர் ஒருவர் என்னிடம் இந்தப் பெட்டியை கொடுத்தார். அவர் கொடுக்கும் போது இது காலி பெட்டி என கூறினார். மேலும் நீங்கள் முன்னே செல்லுங்கள் நான் பின்பு வருகிறேன் எனக்கூறினார். பெட்டியில் என்ன இருக்கிறது என்பது எனக்கு தெரியாது எனக் கூறினார்.
இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நாகரத்தினத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை விமான நிலையத்தில் 5.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து வளைகுடா நாடான சாஸ்தாவிற்கு தினசரி ஏர் அரேபியா விமானம் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை 4.10 மணிக்கு ஏர் அரேபியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. சார்ஜாவுக்கு செல்வதற்காக முன்பதிவு செய்திருந்த பயணிகள் விமான நிலையத்திற்கு வரிசையாக வந்து கொண்டிருந்தனர். அவர்களது உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.
அப்போது, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நாகரத்தினம் (44), என்பவரது நடவடிக்கை மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. சூட்கேசை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஸ்கேனர் உதவியுடன் சோதனை செய்தனர். சோதனையில் நாகரத்தினம் சூட்கேஸின் அடிப்பகுதியில் மெத் எனப்படும் போதைப் பொருட்களை மறைத்து வைத்து விமானத்தில் சார்ஜாவுக்கு கடத்திச் செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சூட்கேசில் இருந்த இரண்டு பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒன்றரை கிலோ போதைப் பொருளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். சர்வதேச அளவில் இதன் மதிப்பு ரூபாய் 5.5 கோடி என்பது தெரியவந்தது.
பின்னர் நாகரத்தினத்தைப் பிடித்து பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர். அப்போது நாகரத்தினம் பாதுகாப்பு படையினரிடம் கூறியதாவது:-
நான் சார்ஜாவிற்கு செல்வதற்காக வந்தேன். அப்போது விமான நிலையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த நண்பர் ஒருவர் என்னிடம் இந்தப் பெட்டியை கொடுத்தார். அவர் கொடுக்கும் போது இது காலி பெட்டி என கூறினார். மேலும் நீங்கள் முன்னே செல்லுங்கள் நான் பின்பு வருகிறேன் எனக்கூறினார். பெட்டியில் என்ன இருக்கிறது என்பது எனக்கு தெரியாது எனக் கூறினார்.
இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நாகரத்தினத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை விமான நிலையத்தில் 5.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.