பொள்ளாச்சி: மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பத் பெறக்கோரி, நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி: மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பத் பெறக்கோரி, நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இன்று கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர், தென்றல் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக மாநில விவசாய அணி துணை தலைவர் தமிழ்மணி, நகர கழக பொறுப்பாளர் வரதராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் மருதவேல், ஆனைமலை ஒன்றிய கிழக்கு செயலாளர் யுவராஜ் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசை கண்டித்தும், வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின்போது திமுகவினர் வலியுறுத்தினர்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இன்று கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர், தென்றல் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக மாநில விவசாய அணி துணை தலைவர் தமிழ்மணி, நகர கழக பொறுப்பாளர் வரதராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் மருதவேல், ஆனைமலை ஒன்றிய கிழக்கு செயலாளர் யுவராஜ் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசை கண்டித்தும், வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின்போது திமுகவினர் வலியுறுத்தினர்.